Published : 05 Feb 2020 06:06 PM
Last Updated : 05 Feb 2020 06:06 PM
வளைகுடா நாடுகளுக்கிடையே உள்ள வேறுபாட்டைத் தீர்க்கும் முயற்சிகளை ஈரான் வரவேற்பதாக அந்நாட்டின் மூத்த பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இராக் நாட்டுக்கான ஈரானின் தூதர் இராஜ் மஸ்ஜிதி கூறும்போது, “ஈரானின் எதிரிகளாகப் பார்க்கப்படும் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அமீரகத்துடன் உள்ள வேறுபாட்டைத் தீர்க்கும் முயற்சிகளை ஈரான் வரவேற்கிறது. இவ்விவகாரத்தில் ஈரானின் முயற்சியைப் பாராட்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி இஸ்லாமிய நாடுகள் தங்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டைத் தீர்க்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அந்தத் தாக்குதலை, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் நடத்தினர். இதற்குப் பதிலடியாகவே அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தைத் தாக்கினர்.
அதற்குப் பதிலடியாக பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது.
தவறவீடாதீர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT