Published : 04 Feb 2020 08:44 AM
Last Updated : 04 Feb 2020 08:44 AM

கரோனா வைரஸுக்கு சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 425 ஆக அதிகரிப்பு: நாடுவாரியாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை விவரம்

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 425 ஆக அதிகரிப்பு. சீனா முழுதும் கரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,400ஐயும் கடந்துள்ளது.

இந்நிலையில் செவ்வாயன்று 64 பேர் கரோனாவுக்குப் பலியானதாக ஹூபே மாகாணத்திலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. ஹூபேயில் கரோனாவுக்கு புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 2,345 பேர் கூடுதலாக இணைந்துள்ளனர்.

ஹூபே மாகாண தலைநகர் வுஹானில் ஒரு சந்தையில் வனவிலங்குகள் இறைச்சி விற்கப்பட்டது, இந்தச் சந்தையிலிருந்து கடந்த டிசம்பரில் இந்த வைரஸ் பரவி தற்போது உலகம் முழுதும் பரவி வருகிறது.

இப்போது சுமார் 20 நாடுகளுக்கும் மேலாக இந்த கரோனா வைரஸ் தொற்றில் சிக்கித் தவித்து வருகிறது.

சீனாவுக்கு வெளியே ஒரேயொரு மரணம் கரோனா வைரஸினால் நிகழ்ந்த நாடு பிலிப்பைன்ஸ் ஆகும்.

தாய்லாந்தில் இதற்கு ஃப்ளூ வைரஸுக்கு எதிரான மருந்து மற்றும் எச்.ஐ.வி. மருந்துகளைக் கலந்து கொடுத்ததில் 48 மணி நேரங்களில் முன்னேற்றம் தெரிவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுவரை சீனாவுக்கு வெளியே கரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை விவரம் வருமாறு:

ஆஸ்திரேலியா: 12

கம்போடியா: 1

ஹாங்காங்: 15

இந்தியா: 3

ஜப்பான்: 20

மக்காவ்: 8

மலேசியா: 8

நேபாள்: 1

பிலிப்பைன்ஸ்: 2 (இறந்த சீன நபர் உட்பட)

சிங்கப்பூர்: 18

தென் கொரியா: 15

இலங்கை: 1

தைவான்: 10

தாய்லாந்து: 19

வியட்நாம்: 8

வட அமெரிக்கா பகுதி:


கனடா : 4

யுஎஸ்: 11

ஐரோப்பா:

பிரிட்டன்: 2

பின்லாந்து: 1

பிரான்ஸ்: 6

ஜெர்மனி: 12

இத்தாலி: 2

ரஷ்யா: 2

ஸ்பெயின்: 1

ஸ்வீடன்: 1

மத்திய கிழக்கு:

ஐக்கிய அரபு அமீரகம்: 5

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x