Published : 03 Feb 2020 02:57 PM
Last Updated : 03 Feb 2020 02:57 PM

கரோனா வைரஸ் குறித்து அமெரிக்கா பயத்தைப் பரப்புகிறது: எங்களுக்கு உதவவில்லை; சீனா குற்றச்சாட்டு

கரோனா வைரஸ் குறித்து பயத்தைப் பரப்பும் அமெரிக்கா அதனைக் கட்டுப்படுத்துவதற்கான உதவிகளை எங்களுக்கு அளிப்பதில் தோற்றுவிட்டது என்று சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறும்போது, “புதியவகை வைரஸான கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் சீனாவின் நடவடிக்கையை பெரும்பாலான நாடுகள் பாராட்டியுள்ளன.

சீனக் குடிமக்களை அவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு அவர்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அந்த முடிவுக்கு மதிப்பளிக்கிறோம். ஆனால், கரோனா வைரஸ் தொடர்பான பயத்தை அமெரிக்கா பரப்புகிறதே தவிர, அவ்வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான உதவிகளை எங்களுக்கு அளிப்பதில் தோற்றுவிட்டது” என்று தெரிவித்துள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சீனா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 360க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x