Published : 03 Feb 2020 12:30 PM
Last Updated : 03 Feb 2020 12:30 PM

பிலிப்பைன்ஸில் கரோனா வைரஸுக்கு ஒருவர் பலி

பிலிப்பைன்ஸில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒருவர் பலியாகினார். சீனாவுக்கு வெளியே முதல் முதலாக கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட முதல் மரணமாக இது பதிவாகியுள்ளது.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் ஊடகங்கள், “கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள சீனாவின் வுஹன் நகரிலிருந்து பிலிப்பைன்ஸ் வந்த 44 வயதான நபர் வைரஸ் பாதிப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

கரோனா வைரஸ் காரணமாக மரணமடைந்த அந்த நபருடன் வந்த 38 வயதான பெண்மணி ஒருவரும் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகிறார் என பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

கரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சீனா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை சீனாவில் கரோனா வைரஸ் காரணமாக 360க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x