சீனாவில் கரோனா வைரஸ் பலி 258 ஆக அதிகரிப்பு; 11,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

சீனாவில் கரோனா வைரஸ் பலி 258 ஆக அதிகரிப்பு; 11,000க்கும் அதிகமானோர் பாதிப்பு
Updated on
1 min read

சீனாவில் கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 258 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 11,000க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்குறித்து சீனாவின் தேசிய சுகாதார மையம் கூறும்போது, “சீனாவின் வூஹான் நகர்லிருந்து பரவிய கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 258 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 11,000 க்கும் அதிகமான நபர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதிதாக 1,347 பேர் இவ்வைரஸ் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

கரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சீனா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா வைரஸ் பரவலுக்கு சீனா எடுத்துள்ள நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in