Published : 29 Jan 2020 01:03 PM
Last Updated : 29 Jan 2020 01:03 PM

கரோனா வைரஸ் ஒரு பிசாசு; எங்கும் ஒளிந்துகொள்ள அனுமதிக்கக் கூடாது: சீன அதிபர்

கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இவ்வைரஸ் பாதிப்பிற்கு சுமார் 1,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு ‘கரோனா' வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

கரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில் வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது சீனாவில் கரோனா வைரஸ் காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 130 பேரைத் தாண்டியுள்ளதாகவும், இவ்வைரஸ் பாதிப்பிற்கு புதிதாக சுமார் 1,500 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சீனாவின் தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உலக சுகாதார அமைப்பின் தலைவர், மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை முடிந்து ஜி ஜின்பிங் கூறும்போது, "கரோனா வைரஸ் ஒரு பிசாசு. அதனை எங்கும் ஒளிந்துகொள்ள அனுமதிக்கக் கூடாது. வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை உலக நாடுகளுக்கு ஒளிவு மறைவின்றி தெரிவிப்போம்" என்றார்.

இந்த நிலையில் சீனாவின் வூஹான் நகரிலிருந்து தங்கள் குடிமக்களை வெளியேற்றும் பணிகளில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன.

இதுகுறித்து அமெரிக்காவின் சுகாதாரச் செயலாளர் அலெஸ் அசார் கூறும்போது, “பயணக் கட்டுப்பாடுகள் உட்பட நோயைக் கையாள்வதற்கான அனைத்துத் திட்டங்களும் தயார் நிலையில் உள்ளன” என்றார். மேலும், வெள்ளை மாளிகையில் கரோனா வைரஸின் நோய் பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்படுவது குறித்தும் தினமும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x