Published : 25 Jan 2020 02:34 PM
Last Updated : 25 Jan 2020 02:34 PM
சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள வூஹான் நகரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 6 நாட்களில் மருத்துவமனை ஒன்றை சீன அரசு கட்டி வருவதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவில் சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு ‘கரோனா' வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
தற்போது சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பிற்கு 41 பேர் பலியாகி உள்ளனர். சமீபத்திய உயிரிழப்புகள் அனைத்தும் வூஹான் நகரில் ஏற்பட்டுள்ளது. மேலும் 1200க்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தொடர்ந்து வூஹன் நகரில் நோய் பாதிப்பு இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வூஹன் நகரில் 6 நாளில் மருத்துவமனை ஒன்றை சீன அரசு எழுப்பி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இம்மருத்துவமனை பிப்ரவரி மாதம் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனா முழுவதும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், நோய் பரவலைத் தடுக்க சீனாவின் 10 நகரங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT