Last Updated : 22 Jan, 2020 01:56 PM

 

Published : 22 Jan 2020 01:56 PM
Last Updated : 22 Jan 2020 01:56 PM

சந்தைக்கு வந்த கிராம மக்களை கொன்று குவித்த தீவிரவாதிகள்: புர்கினோ பாசோவில் 32 பேர் பலி

வாகடூகு

கிராமம் ஒன்றின் சந்தையில் கூடியிருந்த பொதுமக்களை நோக்கி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 36 பேர் பலியானதாக புர்கினா பாசோ அரசு நேற்று தெரிவித்தது.

வடக்கு புர்கினா பாசோவில் திங்களன்று கிராம சந்தையொன்றில் பொதுமக்கள் 36 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அலமாவு கிராமத்தில் மேலும் நான்கு பேரைக் கொல்வதற்கு முன்னர் நாகிராகோ கிராமத்தில் பயங்கரவாதக் குழு இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது. கொல்லப்பட்டவர்கள் தவிர இந்த தாக்குதலில் மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் தொடர்பு அமைச்சர் ரெமிஸ் ஃபுல்கன்ஸ் டான்ட்ஜினோ கூறியதாவது:

"சன்மடெங்கா மாகாணத்தில் தீவிரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதலில் 36 புர்கினேட் மக்கள் பலியாகியுள்ளனர். இதன் காரணமாக புர்கினா அரசாங்கம் கலக்கத்தோடும் கோபத்தோடும் நிறைய கற்றுக்கொண்டுள்ளது.

பொதுமக்களுக்கு எதிரான இந்த தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர்கொண்ட அரசாங்கம், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புப் படையினருடன் மக்களின் வெளிப்படையான ஒத்துழைப்பு வேண்டும் என்று மக்களிடம் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக உள்ளூர் தன்னார்வலர்களின் ஆட்சேர்ப்புக்கு அனுமதிக்கும் சட்டத்தை புர்கினா நாடாளுமன்றம் செவ்வாயறு ஒருமனதாக நிறைவேறியது. ஜிகாதிகளுக்கு எதிரான போராட்டத்தில், உள்ளூர் ஆர்வலர்களுக்கு "இலகுவான ஆயுதங்கள்" வழங்கப்படுகின்றன.

இவ்வாறு தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்தார்.

புர்கினா பாசோவும், அண்டை நாடான மாலி மற்றும் நைஜரும், அடிக்கடி ஜிகாதி தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றன. இது 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சஹேல் பிராந்தியத்தில் இஸ்லாமிய தீவிரவாத வன்முறை பரவத் தொடங்கியதில் இருந்து நூற்றுக்கணக்கான மக்களைக் கொல்லப்பட்டனர்.

ஐ.நா.வைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு மூன்று சஹேல் நாடுகளில் நடந்த ஜிகாதி தாக்குதல்களில் சுமார் 4,000 பேர் கொல்லப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x