Published : 20 Jan 2020 05:19 PM
Last Updated : 20 Jan 2020 05:19 PM
இராக்கில் அரசுக்கு எதிராக முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இதுகுறித்து இராக் ஊடகங்கள் , “இராக் தலைநகர் பாக்தாத் உட்பட பல முக்கிய நகரங்களில் போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். சாலை மறியல், டயர்களை எரித்தல் போன்ற நடவடிக்கைகளிலும் போராட்டக்காரர்கள் இறங்கினர்.
இதில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதனால் வன்முறை வெடித்தது. மேலும், பாதுகாவலர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் பலர் காயமடைந்தனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
இராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் அதில் அப்துல் மஹ்திக்கு எதிராக 3 வாரங்களுக்கும் மேலாகப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. அரசுக்கு எதிரான இப்போராட்டத்தில் ஈடுபட்டவரகளில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.
இராக்கில் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் 300க்கு அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராக்கில் நடக்கும் போராட்டத்தை அமெரிக்கா தூண்டி விடுகிறது என்று ஈரான் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT