Last Updated : 14 Jan, 2020 01:43 PM

 

Published : 14 Jan 2020 01:43 PM
Last Updated : 14 Jan 2020 01:43 PM

பாகிஸ்தானில் மோசமான வானிலை: கடும் மழை, பனிப்பொழிவினால் 30 பேர் பலி

குவெட்டா

பாகிஸ்தானில் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு மோசமான வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் கடும் பனிப்பொழிவு, திடீர் மழைவெள்ளத்தால் இதுவரை 30 பேர் பலியாகினர்.

பனியால் மூடப்பட்ட நெடுஞ்சாலைகளை மீண்டும் திறந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றவும் அதிகாரிகள் போராடி வருவதாக நியூஸ் இன்டர்நேஷனல் ஊடகம் கூறியுள்ளதாவது:

பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலூசிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் முக்கியமாக பனிப்பொழிவு மத்தியில் கூரை இடிந்து விழுந்ததால், கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் பலியாகினர்.

கடும் மழையால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாகாணத்தில் 11 பேர் கொல்லப்பட்டதாக அவசரநிலை அதிகாரிகள் தெரிவித்தனர், இது தவிர, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் மேலும் 5 பேர் இறந்தனர்.

இதற்கிடையில், குவெட்டா - சாமன் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது, அங்கு பாகிஸ்தானை ஆப்கானிஸ்தானுடன் இணைக்கும் கோசாக் - பாஸ் கடும் பனிப்பொழிவு சாலையை அடைத்துக்கொண்டுள்ளது.

எல்லையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான லாரிகள் மற்றும் பிற சரக்கு வாகனங்கள் ஆப்கானிஸ்தான் போக்குவரத்து வர்த்தகம் தடைபட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு அருகில் உள்ள ஈரான் எல்லைக்கு அருகில் உள்ள கச்சரின் தொலைதூர பகுதியில் நான்கு வாகனங்களில் 24 பயணிகள் சிக்கியுள்ளனர்.

பலூசிஸ்தான் முதலமைச்சர் பலூசிஸ்தான் ஜாம் கமல் கான் கூறுகையில், ''மண்டியுள்ள பனிச்சேற்றை அகற்றி சாலைகளை திறக்கவும் மழை மற்றும் பனி பாதிப்பு உள்ள பகுதிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதை உறுதி செய்வதற்காக மாகாண அரசு முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது'' என்றார்.

ஞாயிற்றுக்கிழமை, மஸ்துங், கிலா அப்துல்லா, கெச், சியாரத், ஹர்னாய் மற்றும் மாகாணத்தின் பிஷின் மாவட்டங்களில் கடுமையான பனி காரணமாக அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

அடுத்த 24 மணிநேரங்களுக்கு தலைநகர் குவெட்டா உள்ளிட்ட மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு குளிர் மற்றும் வறண்ட வானிலை முன்னறிவிக்கப்பட்டதாக வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.

கில்கிட் - பால்டிஸ்தானில் இப்படியொரு கடுமையான பனிப்பொழிவு 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக கூறுகிறார்கள். ஆனால் 50 ஆண்டு சாதனையும் தற்போது பெய்துவரும் கடும் பனிப்பொழிவு முறியடித்துள்ளது, இது குவெட்டாவில் 20 - ஆண்டு சாதனையை தாண்டியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x