Published : 08 Jan 2020 02:44 PM
Last Updated : 08 Jan 2020 02:44 PM
இராக்கில் அமெரிக்க விமானத் தளங்கள் மீது தாக்குதல் நடத்திய ஈரானை பிரிட்டன் கண்டித்துள்ளது.
ஈரான் படையின் தளபதி காசிம் சுலைமானைக் கடந்த 3-ம் தேதி பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை வீசிக் கொன்றது. இந்தத் தாக்குதலில் காசிம் சுலைமான் அவரின் மருமகன் முகந்தியாஸ் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி தருவோம், பழிக்குப் பழி வாங்குவோம் என்று ஈரான் அரசு சூளுரைத்துள்ளது. ஈரானுக்கு ஆதரவாக இராக் நாடாளுமன்றமும் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தினர் அனைவரும் வெளியேற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த சூழலில் ஈராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் 'அன் அல் ஆசாத்' மற்றும் 'ஹாரிர் கேம்ப்' ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது. இதில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்க வீரர்கள் மீதான ஈரானின் தாக்குதலை பிரிட்டன் கண்டித்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளர் டோமினிக் ராப் கூறும்போது, “இராக்கில் அமெரிக்க ராணுவத் தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். இம்மாதிரியான பொறுப்பற்ற தாக்குதலை மீண்டும் நடத்த வேண்டாம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT