Published : 04 Jan 2020 04:43 PM
Last Updated : 04 Jan 2020 04:43 PM
டெல்லியில் 2012 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட ஈரான் தளபதி சுலைமானுக்கு பங்குண்டு என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் போர் புரிவதற்காக சுலைமான் கொல்லப்படவில்லை என்று கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சுலைமானுக்கு டெல்லி மற்றும் லண்டனில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் அவருக்கு பங்குண்டு என்ற புதிய தகவலையும் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ட்ரம்ப் கூறும்போது, “பயங்கரவாத அட்சி முடிந்தது. இந்தியா (2012 ஆம் ஆண்டில் டெல்லியில் இஸ்ரேல் அதிகாரிகளை குறி வைத்து காரில் வைக்கப்பட்ட குண்டு) மற்றும் லண்டன் குண்டுவெடிப்பு சம்பங்களில் திட்ட திட்டியதில் ஈரான் புரட்சிக்கர படை தளபதி சுலைமானுக்கு பங்கு உண்டு” என்று தெரிவித்தார்.
முன்னதாக, பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இதன் காரணமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் வலுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT