Published : 03 Jan 2020 11:22 AM
Last Updated : 03 Jan 2020 11:22 AM

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் கடற்கரைப் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் மையம் தரப்பில், “ஜப்பானின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவாகியது. இதன் ஆழம் 32 கிலோ மீட்டர் ஆகும். சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்க அதிர்வுகள் ஜப்பானின் கிழக்குப் பகுதிகள் மற்றும் டோக்கியோவிலும் உணரப்பட்டதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானின் தேசிய பேரிடர் மேலாண்மை பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், 15,000க்கும் அதிகமானவர்கள் பலியானார்கள். 1 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x