Published : 01 Jan 2020 03:32 PM
Last Updated : 01 Jan 2020 03:32 PM
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட போலீஸார் பலியாகினர்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி பையாஸ் கூறும்போது, “ ஆப்கானிஸ்தானில் பால்க் மாகாணத்தில் சோதனைச் சாவடியில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்றார்.
சோதனைச் சாவடியை இலக்காக வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால், இந்தத் தாக்குதல் குறித்து தலிபான்கள் தரப்பிலிருந்து எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு அமெரிக்கா - தலிபான்கள் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா கேட்டுக் கொண்டதன் பேரில் ஆப்கனில் தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கு தலிபான்கள் சம்மதம் தெரிவித்த நிலையில், மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT