Published : 30 Dec 2019 02:56 PM
Last Updated : 30 Dec 2019 02:56 PM
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் பலியாயினர்.
இதுகுறித்து டெக்சாஸ் மாகாண போலீஸார், “டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தேவலாயம் ஒன்றில் பிரார்த்தனை நடந்து கொண்டிருக்கும்போது மர்ம நபர் ஒருவர் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 2 பேர் பலியாயினர். ஒருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தேவலாயப் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்” என்று தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அந்தக் காட்சிகளை நேரலை செய்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவலாயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு டெக்சாஸ் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT