Published : 27 Dec 2019 02:37 PM
Last Updated : 27 Dec 2019 02:37 PM

அப்பாவி மக்கள் மீது தாக்குதல்: சிரியா, ரஷ்யா, ஈரானுக்கு ட்ரம்ப் கண்டனம்

சிரியாவில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டித்திருக்கிறார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “ இட்லிப் மாகாணத்தில் ஆயிரக்கணக்கான மக்களை சிரியாவுடன் இணைந்து ரஷ்யாவும், ஈரானும் கொன்று குவித்து வருகிறது. இதனை நீங்கள் செய்யாதீர்கள். இந்த படுகொலையை தடுக்க துருக்கி கடுமையாக முயற்சி செய்து வருகிறது” என்றார்.

முன்னதாக, துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார்.

அப்பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் தங்கள் படைகளைத் திரும்பப் பெற்றனர். இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் குர்து படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சிரியா போர்

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வேறு நாட்டுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x