Published : 26 Dec 2019 06:22 PM
Last Updated : 26 Dec 2019 06:22 PM
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்தினம் வங்கியில் பணத்தைத் திருடிய ஒருவர், சாலையில் வீசி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பிறகும் அன்றைய இரவில் கிறிஸ்துமஸ் தாத்தா சாமானிய மக்களுக்குப் பரிசளிப்பார். அத்தகைய சம்பவம்தான் அமெரிக்காவின் கொலொராடோவில் நேற்று நடந்தது.
டேவிட் ஆலிவர் என்ற நபர் கொலொராடோவில் உள்ள அகாடமி வங்கியில் திருடிய பணத்தை, சாலையில் வீசி அங்கிருக்கும் மக்களுக்கு ஹேப்பி கிறிஸ்துமஸ் என்று வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆலிவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தனியார் செய்தி தொலைக்காட்சியிடம் கூறியபோது, ''அந்த நபர் வங்கியிலிருந்து பணத்தைக் கொள்ளையடித்து வெளியே வந்தார். அதன்பிறகு சாலையில் நின்று பையிலிருந்த பணத்தை வெளியே வீசினார். அதன் பின்னர் போலீஸார் கைது செய்யும் வரை காத்திருந்தார்’’ என்று தெரிவித்தார்.
எனினும் இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் தரப்பில் இதுவரை கருத்து தெரிவிக்கப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT