Published : 21 Dec 2019 06:49 PM
Last Updated : 21 Dec 2019 06:49 PM

சவுதியால்தான் பாகிஸ்தான் இஸ்லாமிக் உச்சி மாநாட்டிலிருந்து வெளியேறியது: எர்டோகன்

சவுதியின் பொருளாதாரத் தடை மிரட்டலால்தான் இஸ்லாமிக் உச்சி மாநாட்டிலிருந்து பாகிஸ்தான் வெளியேறியது என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் நடைபெற்ற இஸ்லாமிக் உச்சி மாநாட்டில் மலேசியப் பிரதமர் பின் முகமத் மற்றும் துருக்கி அதிபர் எர்டோகனுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கலந்துகொள்ள இருந்தார். இந்நிலையில் கடைசி நேரத்தில் உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் கலந்துகொள்ளவில்லை.

பாகிஸ்தான் வெளியேறியதற்கான காரணத்தை துருக்கி அதிபர் எர்டோகன் தற்போது அறிவித்துள்ளார்.

இதுகுறித்து எர்டோகன் கூறும்போது, “சவுதியின் பொருளாதாரத் தடை மிரட்டலால்தான் பாகிஸ்தான் இஸ்லாமிக் உச்சி மாநாட்டிலிருந்து வெளியேறியது.

இஸ்லாம் நாடுகளை சவுதி மிரட்டுவது முதல் முறை அல்ல. இதற்கு முன்னரும் சவுதி மிரட்டியுள்ளது. கத்தார், ஈரான், மலேசியா ஆகிய நாடுகளுக்கு சர்வதேச விவகாரத்தில் தொடர்ந்து ஒத்துழைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x