Published : 19 Dec 2019 06:06 PM
Last Updated : 19 Dec 2019 06:06 PM
அமெரிக்காவின் பொருளாதார தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட, இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது.
மலேசியாவில் உலகத் தலைவர்கள் மற்றும் இஸ்லாம் மதத் தலைவர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி இதனைத் தெரிவித்தார்.
இதுகுறித்து ஹசன் ரவ்ஹானி கூறும்போது, “அமெரிக்காவின் ஆதிக்கத்திலிருந்து இஸ்லாமிய நாடுகள் காப்பாற்றப்பட வேண்டும். அமெரிக்காவின் பொருளாதார பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதில் இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, ஈரான் மீது அமெரிக்கா சர்வதேச சட்டங்களை மீறி பொருளாதாரத் தடை விதித்திருப்பதாக மலேசிய பிரதமர் மகாதீர் முகமத் விமர்சித்திருந்தார்.
அமெரிக்கா உள்ளிட்ட (ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, சீனா) 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வத் தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.
ஆனால், அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறார். இதற்குப் பதிலடியாக ஈரான், அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் நிலவி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT