Published : 19 Dec 2019 02:50 PM
Last Updated : 19 Dec 2019 02:50 PM

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

இந்தியாவுக்கு வருகை தர, பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் 650 இடங்களைக் கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடந்தது. இதில் பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவைப்படும் நிலையில், கன்சர்வேடிவ் கட்சி 364 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதில் தொழிலாளர் கட்சிக்கு 203 இடங்கள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து பெரும்பான்மையுடன் கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு புதன்கிழமை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்த இந்திய பிரதமர் மோடி, இந்தியா வருமாறு போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த போரிஸ் ஜான்சன், அவரது அழைப்பை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x