Published : 16 Dec 2019 04:35 PM
Last Updated : 16 Dec 2019 04:35 PM
ஏமனில் 2020-ம் ஆண்டில் வன்முறைகள் குறையும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அவசர நிவாரணக் குழுவின் தலைவர் மார்க் கூறும்போது, “ ஏமனில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் உள்நாட்டுப் போர் அடுத்த வருடம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சவுதி மற்றும் ஏமன் அரசு இடையே ஏற்பட்ட சமீபத்திய ஒப்பந்தம் இதற்கான அறிகுறிகளாக உள்ளன” என்றார்.
முன்னதாக, ஏமனில் தென் பகுதி பிரிவினைவாதிகளுக்கும் ஏமன் அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதற்காக சவுதி அரேபியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு தெரிவித்தது.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
மேலும் ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர்.
ஏமனில் ஐந்து ஆண்டுகளாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஏமன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் சவுதி இறங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT