Published : 07 Dec 2019 01:50 PM
Last Updated : 07 Dec 2019 01:50 PM

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படை தாக்குதல்: 15 தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 15 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் மூத்த படை தளபதி சனிக்கிழமை கூறும்போது, ''ஆப்கானிஸ்தானில் கந்தஹர் மாகாணத்தில் தலிபான்களுக்கு எதிராக ஆப்கன் பாதுகாப்புப் படையினர் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் 12 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களும் பறிக்கப்பட்டன” என்று தெரிவித்தார்.

ஆனால், இந்தத் தாக்குதல் குறித்து தலிபான்கள் தரப்பில் ஏதும் இதுவரை கருத்துத் தெரிவிக்கப்படவில்லை.

தலிபான்கள் மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த சில வாரங்களாகவே மூன்று மாகாணங்களில் (நன்கர்ஹர், கந்தஹர், வார்டார்க்) ஆப்கன் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்தத் தேடுதல் வேட்டையில் தலிபான்கள் பலர் கொல்லப்பட்டனர். மேலும், தலிபான்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும், பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வரும் நேரத்தில் தலிபான்கள் மீது ஆப்கன் அரசு தாக்குதலை நடத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x