Published : 27 Nov 2019 04:37 PM
Last Updated : 27 Nov 2019 04:37 PM

சிரியாவில் கார் குண்டுவெடிப்பில் 17 பேர் பலி: துருக்கி

சிரியாவின் வடக்குப் பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 17 பேர் பலியானதாக துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “கடந்த மாதம் துருக்கி ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பகுதிகளான டெல் ஹல்லாஃப் மற்றும் ரஸ் அல் ஐன் பகுதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் 17 பேர் பலியாகினர். 20க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இந்தக் குண்டுவெடிப்பை குர்து படைகள் நடத்தி இருப்பதாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து துருக்கி ராணுவம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ ஐஎஸ் தீவிரவாதிகளை விட குர்து தீவிரவாதிகளின் நடவடிக்கை மோசமாக உள்ளது. சிரியாவில் தொடர்ந்து கார் குண்டுவெடிப்பு நடவடிக்கைகளில் குர்து தீவிரவாதிகள் ஈடுபடுகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் தங்கள் படைகளைத் திரும்பப் பெற்றனர். சிரியாவில் துருக்கிப் படையினர் குர்து படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தினர்.

துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி ராணுவம் குர்து படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x