Published : 27 Nov 2019 12:48 PM
Last Updated : 27 Nov 2019 12:48 PM
காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளின் ராணுவத் தளங்கள் மீது இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தின.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, ''காசாவிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக இன்று (புதன்கிழமை) ஹமாஸ் தீவிரவாதிகளின் ராணுவத் தளங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது'' என்று தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் இரு தளங்கள் தாக்கப்பட்டதாகவும், இதில் காயமடைந்தவர்கள் குறித்த தகவல் இல்லை என்றும் காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரு வாரங்களுக்கு முன்னர் இஸ்ரேல்- பாலஸ்தீன எல்லைப் புறத்தில் காசா பகுதியில் இரண்டு நாட்களாக இஸ்லாமிக் ஜிகாத் தீவிரவாத அமைப்புக்கும் இஸ்ரேல் படைகளுக்கும் இடையே சண்டை நடந்தன. இதில் பாலஸ்தீன தீவிரவாதக் குழுவின் முக்கியத் தளபதியான பஹா அபு அல் அட்டா கொல்லப்பட்டார். மேலும், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 34 பாலஸ்தீனர்கள் பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து போர் நிறுத்தம் அங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காசா பகுதியில் மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளது இஸ்ரேல்.
முன்னதாக 1967-ம் ஆண்டு நடந்த போரில் கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குகரைப் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது. ஜெருசலம் நகரை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே அவ்வப்போது மோதல் வலுத்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT