Published : 27 Nov 2019 10:57 AM
Last Updated : 27 Nov 2019 10:57 AM
இராக்கில் இரு வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து இராக் பாதுகாப்புப் படைகள் கூறும்போது, “இராக்கில் ஷாப் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் பாயா மாவட்டத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 6 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று தெரிவித்துள்ளனர்.
இந்தக் குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இந்தத் தாக்குதலை ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தி இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்தக் குண்வெடிப்புக்கு இராக்கில் கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் போராட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் இராக் பாதுகாப்புப் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஐஎஸ் தீவிரவாதிகளின் எழுச்சியால் பெரும் குழப்பம், அமைதியின்மை ஏற்பட்டது. இந்த நிலையில் இராக்கிலிருந்து 2014-ம் ஆண்டில் அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் வாபஸ் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்க இராக் அரசு நடவடிக்கையில் ஈடுபட்டது.
இதனைத் தொடர்ந்து இராக் நாட்டுக்கு உட்பட்ட மோசூல் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக உள்நாட்டுப் போர் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 2017 ஆம் ஆண்டு போரில் வெற்றி பெற்றதாக இராக் அரசு அறிவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT