Published : 22 Nov 2019 02:48 PM
Last Updated : 22 Nov 2019 02:48 PM

ஆப்கனின் 10 ராணுவ வீரர்களை விடுவித்த தலிபான்கள்

ஆப்கானிஸ்தானின் 10 ராணுவ வீரர்களை தலிபான் தீவிரவாதிகள் விடுதலை செய்துள்ளனர்.

இதுகுறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறும்போது, “ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட 10 ராணுவ வீரர்களை சராஜ் மாவட்டத்தில் தலிபான்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைந்தனர்” என்று தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தானில் கைதிகள் இடமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் தலிபான்களால் 2016 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட இரண்டு பேராசிரியர்கள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முயற்சியால் விடுவிக்கப்பட்டனர். இதற்கு பதிலாக தீவிரவாதிகள் மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது ஆப்கனைச் சேர்ந்த 10 ராணுவ வீரர்களை தலிபான்கள் விடுதலை செய்துள்ளனர்.

தலிபான்கள் மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக மூன்று மாகாணங்களில் (நன்கர்ஹர், கந்தஹர், வார்டார்க்) ஆப்கன் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். கடந்த மூன்று வாரங்களாக ஆப்கன் பாதுகாப்புப் படைகள் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் தலிபான்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இரு தரப்பிலும் அமைதியின் அடிப்படையில் ராணுவ வீரர்கள் மற்றும் தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளது இருதரப்புக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான ஆரம்பமாகப் பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x