Published : 20 Nov 2019 05:55 PM
Last Updated : 20 Nov 2019 05:55 PM

பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் ரணில் விக்ரமசிங்கே 

இலங்கை பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கே, வியாழக்கிழமை ராஜினாமா செய்ய இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் தேர்தல் சனிக்கிழமை நடந்தது. சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. முடிவு ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

அதிபர் தேர்தலில் 54 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்று பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார்.

சுமார் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவை வெற்றி கொண்டார் கோத்தபய ராஜபக்ச. இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ச பொறுப்பேற்றார்.

ஆளும் கட்சி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் வியழக்கிழமை ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக அவரது அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தபய ராஜபக்ச தனது மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்சேவை அடுத்த பிரதமராக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x