Published : 20 Nov 2019 05:21 PM
Last Updated : 20 Nov 2019 05:21 PM

சிரியாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 11 பேர் பலி

சிரியாவில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதில் 11 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து சிரியாவின் போர் கண்காணிப்புக் குழு கூறும்போது, “இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் சிரியாவின் டமாஸ்கஸ் பகுதியில் நடத்திய வான்வழித் தாக்குதலில் 11 பேர் பலியாகினர். இவர்களில் 7 பேர் ஈரானியர்கள். சிரியாவில் உள்ள ஈரானின் ராணுவத் தளங்கள் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன” என்று தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலை இஸ்ரேல் அரசும் உறுதிப்படுத்தியுள்ளது. சிரியாவிலிருந்து இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

— Danny Makki (@Dannymakkisyria) November 20, 2019

சிரியா தரப்பில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது உண்மை என்றும் இதனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்- சிரியா இடையே தீவிரவாதத் தாக்குதல் மற்றும் எல்லைப் பிரச்சினை தொடர்பாக அவ்வப்போது இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதில் இரு தரப்பும் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இஸ்ரேலைப் பொறுத்தவரை ஈரானைத் தங்களுக்கான அச்சுறுத்தல் கொண்ட நாடாகக் கருதுகிறது. இதனால் ஈரான் ஆதரவு நிலைப்பட்டைக் கொண்ட சிரியா மீது இஸ்ரேல் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x