Last Updated : 20 Nov, 2019 12:05 PM

 

Published : 20 Nov 2019 12:05 PM
Last Updated : 20 Nov 2019 12:05 PM

இந்தியாவில் மருத்துவ சிகிச்சை: விசா சலுகைகள் அறிவிப்பால் வெளிநாட்டினர் மகிழ்ச்சி

மருத்துவ சிகிச்சை பெற இந்தியாவுக்கு வர விரும்பும் வெளிநாட்டினருக்கு விசா தொடர்பாக முக்கிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து வெளிநாட்டினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சமீபத்தில் இந்தியா தாராளமயமாக்கப்பட்ட மருத்துவ விசா கொள்கையை அமல்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற விரும்பும் வெளிநாட்டினருக்கு இந்தியா முக்கிய சலுகைகளை அறிவித்துள்ளது.

இதுகுறித்து துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நோய் காரணமாக இந்திய மருத்துவமனைகளில் சிகிச்சைபெற வெளிநாட்டிலிருந்து பலரும் வருகை தருகின்றனர். இவர்கள் இந்திய மருத்துவமனைகளில் உட்புற சிகிச்சைக்காக அனுமதி பெற 180 நாட்கள் வரை தங்கிச்செல்ல விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதன்படி வெளிநாட்டினரின் முதன்மை விசாவை மருத்துவ விசாவாக மாற்றவேண்டுமென இருந்த விதிகளிலிருந்து முழுவதும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில், வெளி நோயாளித்துறையின் ஆலோசனை / சிகிச்சை மட்டுமே தேவைப்படும் ஒரு சிறிய மருத்துவ நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு வெளிநாட்டவர் தனது முதன்மை விசாவில் எந்த மருத்துவமனை / சிகிச்சை மையத்திலும் சிகிச்சை பெறலாம்.

இந்தியாவுக்குள் உட்புற மருத்துவ சிகிச்சை அல்லது தங்கியிருக்கும் கால அவகாசம் 180 நாட்களுக்கு குறைவானதாக இருந்தால் தேவைப்பட்டால், சிகிச்சை பெற விரும்பும் வெளிநாட்டவரின் (பாகிஸ்தான் நாட்டவர் தவிர) முதன்மை விசா அல்லது அவரது முதன்மை விசாவின் காலம் ஏதேனும் இருந்தால் எது முந்தையதோ, அவ்விசாவின் அடிப்படையில் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அத்தகைய உட்புற மருத்துவ சிகிச்சையை எடுக்க அனுமதிக்கப்படுகிறார்.

சம்பந்தப்பட்ட மருத்துவமனை / சிகிச்சை மைய அதிகாரிகள் வெளிநாட்டவரின் விவரங்களை ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் இந்தியாவில் பெறவேண்டிய உட்புற மருத்துவ சிகிச்சையின் விவரங்களுடன் வெளிநாட்டவர் வழங்க வேண்டும்,

அத்தகைய உட்புற மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனை / சிகிச்சை மையத்தில் வெளிநாட்டவர் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சிகிச்சையளிக்கும் மருத்துவரால் முறையாக சான்றளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர் பிராந்திய பதிவு அலுவலகத்துக்கு (FRRO) வழங்கவேண்டும்.

சிகிச்சை பெற விரும்பும் வெளிநாட்டவர் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன்பே கஷ்டப்பட்டிருக்கலாம், ஆனால் மருத்துவமனை / சிகிச்சை மையத்தில் உட்புற மருத்துவ சிகிச்சை தேவைப்படும் மருத்துவ நோயறிதலின் போது சிகிச்சையளிக்கும் மருத்துவரின் கவனத்திற்கு புதியதாக ஏதாவது கண்டறியப்பட்டால் அதுவும் உட்புற மருத்துவ சிகிச்சையானது நோய்களுக்கான சிகிச்சையையும் உள்ளடக்கும்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கு சிகிச்சையளிப்பது மருத்துவ விசாவில் மட்டுமே அனுமதிக்கப்படும்.

இவ்வாறு துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கிட்டத்தட்ட ஆறுமாத காலம் எந்தவித விசா தொந்தரவும் இன்றி முதன்மை விசாவின்மூலமே தங்கிச்செல்லும் இந்த அறிவிப்பு வெளிநாட்டினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x