Published : 20 Nov 2019 07:57 AM
Last Updated : 20 Nov 2019 07:57 AM

இஸ்ரேல் தண்ணீர் தொழில்நுட்பத்தை பகிர வேண்டும்

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ‘உலக தண்ணீர் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கட்டுப்பாடு’ (வாடெக்) என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா சார்பில் மத்திய தண்ணீர் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பங்கேற்றுள்ளார். அவர் இந்த மாநாட்டில் பேசியதாவது:

இஸ்ரேல் தண்ணீர் வளம் குறைவாக உள்ள பகுதி. ஆனாலும், கிடைக்கும் தண்ணீரை சிறப்பாக நிர்வாகம் செய்வதால், இங்கு பற்றாக்குறை இல்லை. கடுமையான பருவநிலைக்கு நடுவிலும் தண்ணீர் மேலாண்மையில் வல்லரசாக விளங்கும் இஸ்ரேலுக்கு பாராட்டுகள்.

தண்ணீர் வளம் குறைந்து வருவதால், உலகம் முழுவதும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தண்ணீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் இஸ்ரேல் மற்ற நாடுகளுக்கு உத்வேகம் அளிப்பதாக விளங்குகிறது. எனவே, தண்ணீர் மேலாண்மை தொடர்பான தொழில்நுட்பங்கள் மற்றும் தகவல்களை அந்த நாடு பிற நாடுகளுடன் பகிர்ந்து கொண்டால் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x