Published : 19 Nov 2019 06:32 PM
Last Updated : 19 Nov 2019 06:32 PM

3 மாதங்களுக்குப் பிறகு தொடங்கிய தபால் சேவை: 7 கடிதங்களை இந்தியாவிடம் வழங்கிய பாகிஸ்தான்

3 மாதங்களாக நிறுத்தி வைத்திருந்த இந்தியாவுடனான தபால் சேவையை பாகிஸ்தான் மீண்டும் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று இந்திய தபால் அதிகாரிகளிடம் 7 கடிதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி, 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் திரும்பப் பெற்றது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தையும் 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மத்திய அரசு அறிவித்தது.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கையால் கோபம் அடைந்த பாகிஸ்தான் இந்தியாவுடனான பேருந்து சேவை, வர்த்தக சேவை மற்றும் தபால் சேவையை நிறுத்தியது.

இந்நிலையில் மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் தபால் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடங்கள் செய்தி வெளியிட்டன. இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) 7 கடிதங்களை இந்திய தபால் அதிகாரிகளிடம் பாகிஸ்தான் ஒப்படைத்துள்ளது.

இந்தியாவுடனான தபால் சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், பார்சல் சேவைகள் இன்னும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x