Published : 18 Nov 2019 05:12 PM
Last Updated : 18 Nov 2019 05:12 PM

கலிபோர்னியாவில் விருந்து நிகழ்வில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

கலிபோர்னியாவில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர்.

இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், “ கலிபோர்னியாவில் பிரஸ்னோ நகரில் ஒரு குடும்பம் சார்பாக நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் கால்பந்தாட்ட நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் விருந்து நிகழ்ச்சிக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 4 பேர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் வயது சுமார் 25 முதல் 30 வயது இருக்கும் என்று என்று போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் மூலம் குற்றவாளியைக் கண்டறியும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விருந்து நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு கலிபோர்னியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x