Published : 15 Nov 2019 06:18 PM
Last Updated : 15 Nov 2019 06:18 PM

ஆப்கனில் தீவிரவாதத் தாக்குதல்: தலைமை போலீஸ் அதிகாரி உட்பட 4 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத் தாக்குதலில் தலைமை போலீஸ் அதிகாரி உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ஆப்கன் அதிகாரிகள் தரப்பில், ''ஆப்கானிஸ்தானில் வர்சஜ் மாவட்டத்தின் தலைமை போலீஸ் அதிகாரி மற்றும் அவரது மூன்று பாதுகாவலர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தாகர் பக்லாம் நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கனில் நிலவும் பதற்ற நிலை காரணமாக அங்கு பொதுத் தேர்தல் முடிவுகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

ஆப்கனில் அமைதி ஏற்பட, தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கையில் பாகிஸ்தானும் தலிபான் பிரதிநிதிகளும் இறங்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x