Published : 15 Nov 2019 05:46 PM
Last Updated : 15 Nov 2019 05:46 PM

இட்லிப் பகுதியில் சிரியா மீண்டும் தாக்குதல்

சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்

போர் அபாயப் பகுதியான இட்லிப்பில் சிரிய ராணுவம் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளர்ச்சியாளர்களிடமிருந்து இட்லிப் பகுதியை முழுமையாக கைப்பற்றுவதற்காக அப்பகுதியில் மீண்டும் தாக்குதல் நடத்த சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அங்கு தங்கள் இரண்டாவது ராணுவத் தாக்குதலை சிரிய ராணுவம் தொடங்கியுள்ளது.

சிரியாவுடன் இணைந்து ரஷ்யப் படைகளும் தாக்குதல் தொடுத்துள்ளன.

இந்தத் தாக்குதல் குறித்து சிரியா தரப்பில், “தாக்குதல் நடத்தப்படுவதைத் தொடர்ந்து இட்லிப் பகுதியில் பொதுமக்கள் முழுவதுமாக வெளியேற வாய்ப்பளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப் பகுதியை மீட்க இறுதிச்சண்டை நடந்து வருகிறது

இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வேறு நாட்டுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x