Published : 14 Nov 2019 06:19 PM
Last Updated : 14 Nov 2019 06:19 PM

சவுதி - ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தை

ஏமனில் நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவர சவுதி ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தை ஒமனில் நடைபெற இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து சவுதியின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தரப்பில், “ஏமனில் ஐந்து ஆண்டுகளாக நிலவும் போரை முடிவுக்குக் கொண்டுவர சவுதி மற்றும் ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தை ஓமனில் நடைபெறவுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சவுதி மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் பிரதிநிதிகள் கடந்த இரண்டு மாதங்களாகப் பேசி வந்துள்ளனர்.

முன்னதாக, ஏமன் அரசுக்கும் அந்நாட்டின் தென் பகுதியில் உள்ள பிரிவினைவாதிகளுக்கும் இடையே சவுதி தலைமையில் அமைதிக்கான ஒப்பந்தம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஏமன் போர்

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

மேலும் ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர்.

ஏமனில் நான்கு ஆண்டுகளாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x