Published : 13 Nov 2019 06:32 PM
Last Updated : 13 Nov 2019 06:32 PM

ஆப்கன் பொதுத் தேர்தல் முடிவு மீண்டும் தள்ளி வைப்பு

ஆப்கான் பொதுத் தேர்தல் முடிவுகள் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆப்கான் தேர்தல் ஆணையம் புதன்கிழமை கூறும்போது, “ நவம்பர் 14 ஆம் தேதி ஆப்கான் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தேதி மாற்றப்பட்டுள்ளது. 8,000 ஒட்டு பதிவு மையங்களில் நிலவும் பதற்ற நிலை காரணமாக மீண்டும் தேர்தல் முடிவுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறுகளும் தேர்தல் முடிவு தள்ளி வைக்கப்பட்டதற்கான காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரந்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முன்னரே ஆப்கான் தேர்தல் முடிவுகள் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஆப்கான் தேர்தல் முடிவுகள் தள்ளி வைக்கப்பட்டிருப்பது அந்நாட்டு மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கனில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தலிபான்களின் அச்சுறுத்தலை மீறியும் 90 லட்சத்துக்கு அதிகமான மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தார்கள்.

ஆப்கனில் 18 ஆண்டுகளாக ஆப்கான் அரசுக்கும், தலிபான்களுக்கு இடையேயான போர் நடந்து வருகிறது. இதனை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதற்ககான முயற்சியில் பாகிஸ்தான் இறங்கி உள்ளது. இந்த நிலையில் அடுத்து வரும் புதிய அரசின் மூலம் இதற்கு தீர்வு எட்டப்படும் என்று ஆப்கான் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x