Published : 13 Nov 2019 05:49 PM
Last Updated : 13 Nov 2019 05:49 PM
சிரியாவில் நடத்திய தாக்குதலில் முக்கிய ஐஎஸ் தீவிரவாதி பிடிப்பட்டதாக துருக்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து துருக்கி உள்துறை அமைச்சர் சுலைமான் சொய்லு புதன்கிழமை கூறும்போது, “சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி பாதுகாப்புப் படைகள் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் முக்கிய ஐஎஸ் தீவிரவாதி பிடிப்பட்டிருக்கிறார். தீவிரவாதி குறித்த தகவலை தற்போது வெளியிட முடியாது” என்று தெரிவித்தார்.
பிடிப்பட்டவர் வெளிநாட்டைச் சேர்ந்த ஐஎஸ் தீவிரவாதி என்று கூறபடுகிறது.
இந்த நிலையில் பிடிப்பட்ட ஐஎஸ் தீவிரவாதியை சொந்த நாட்டிடம் ஒப்படைக்க அதிகாரிகளிடம் துருக்கி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் தங்கள் படைகளை திரும்ப பெற்றனர். சிரியாவில் துருக்கிப் படையினர் குர்து படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தினர்.
துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி ராணுவம் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT