Published : 13 Nov 2019 11:48 AM
Last Updated : 13 Nov 2019 11:48 AM

இஸ்ரேல் தாக்குதல்: பாலஸ்தீன தீவிரவாத குழு தலைவர் கொல்லப்பட்டார்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன தீவிரவாத குழுவின் முக்கிய தளபதியான பஹா அபு அல் அட்டா கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாலஸ்தீன அதிகாரிகள் தரப்பில், ”இஸ்ரேல் படைகள் காசா பகுதியில் செவ்வாய்கிழமை ஈரான் ஆதரவு- பாலஸ்தீன தீவிரவாத குழுவான இஸ்லாமிக் ஜிஹாத்தின் படைத் தளபதியான பஹா அபு அல் அட்டா கொல்லப்பட்டார். இஸ்ரேல் பாலஸ்தீன எல்லைப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் இதுவாகும். இரவு முழுவதும் பாலஸ்தீன படைகள் தாக்குதல் நடத்தின.” என்று தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலில் இஸ்ரேலை சேர்ந்த 25 பேரும் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக 1967 -ம் ஆண்டு நடந்த போரில் கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குகரை பகுதியை இஸ்ரேல் கைபற்றியது. ஜெருசலம் நகரை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே மோதல் வலுத்து வருகிறது.

காசா எல்லையோரத்தில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேலை எதிர்த்து பல மாதங்களாக போராடினர்.

இதில் ஏராளமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் . இது தொடர்பான விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x