Published : 06 Nov 2019 07:55 PM
Last Updated : 06 Nov 2019 07:55 PM

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு: நிரவ் மோடியின் புதிய ஜாமீன் விண்ணப்பம் நிராகரிப்பு

லண்டன், பிடிஐ

மார்ச் 19ம் தேதி கைது செய்யப்பட்டது முதல் நிரவ் மோடி வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நிரவ் மோடிக்கு மேலும் ஒரு பின்னடைவாக, நவம்பர் 6ம் தேதியன்று பிரிட்டன் நீதிமன்றம் ஜாமீன் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்தது.

ஏற்கெனவே பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவதை எதிர்த்து அவர் போராடி வருகிறார். இந்நிலையில் புதன்கிழமையான இன்று அவர் நீல நிற ஸ்வெட்டருடன் முழுதும் ஷேவ் செய்யப்பட்ட முகத்துடன் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மேஜிஸ்ட்ரேட் கோர்ட் முன் ஆஜர் படுத்தப்பட்டார்.

நிரவ் மோடி பிணைத்தொகையை 2 மில்லியன் பவுண்டுகளிலிருந்து 4 மில்லியன் பவுண்டுகளாக உயர்த்தியும் நீதிபதி எம்மா ஆர்புத்நாட் ஜாமீன் மனுவை நிராகரித்தார்.

இதே கோர்ட்டில் முன்பு ஆஜரான போது காணப்பட்டதை விட நிரவ் மோடி நல்ல ஆரோக்கியத்துடன் காணப்பட்டார். தனது கடந்த விண்ணப்பத்தில் மனச்சோர்வு, அச்சம் ஆகிய காரணிகளைக் குறிப்பிட்டு ஜாமின் கேட்டார். ஆனாலும் அவருக்கு ஜாமீன் தகையவில்லை.

சிறையில் நிரவ் மோடி கடும் துன்பத்தை அனுபவித்து வருவதாக அவருக்கு எப்படியாவது ஜாமீன் வாங்கித் தந்து விட வேண்டும் என்று அவரது வழக்கறிஞர்கள் குழு வாதிட்டது.

ஆனாலும் அவரை லண்டன் நீதிமன்றம் ஜாமீனில் விடுவதாக இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x