Published : 05 Nov 2019 05:56 PM
Last Updated : 05 Nov 2019 05:56 PM

ஆப்கனில் தொடரும் தலிபான்களுக்கு எதிரான வேட்டை

ஆப்கனில் தலிபான்களுக்கு எதிரான தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ஆப்கன் பாதுகாப்புப் படையினரால் மூன்று தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், “ஆப்கானிஸ்தானில் கடந்த சில மாதங்களாகவே தலிபான்களுக்கு எதிராக, தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தலிபான்களுக்கு எதிராக காபூல் அருகே ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் மூன்று தலிபான்கள் கொல்லப்பட்டனர். மேலும் தலிபான்களின் ஆயுதங்கள் தாக்கு அழிக்கப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாரக் இ பாரக் மாவட்டத்தில் ஆப்கன் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 5 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.

தலிபான்கள் மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக மூன்று மாகாணங்களில் (நன்கர்ஹர், கந்தஹர், வார்டார்க்) ஆப்கன் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். கடந்த மூன்று வாரங்களாக ஆப்கன் பாதுகாப்புப் படை நடத்தும் தாக்குதலில் தலிபான்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுத்துவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இதனை அடிப்படையாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், ஆப்கனில் தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில் ஆப்கனில் அமைதி ஏற்பட, தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கையில் பாகிஸ்தானும், தலிபான் பிரதிநிதிகளும் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x