Published : 02 Nov 2019 01:12 PM
Last Updated : 02 Nov 2019 01:12 PM

காசாவில் பாலஸ்தீன தீவிரவாதிகள் இஸ்ரேல் ராணுவம் மோதல்

காசாவில் பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே நடத்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 2 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து பாலஸ்தீன அதிகாரிகள் தரப்பில், “காசாவில் பாலஸ்தீன தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் ஒருவர் பலியானார். இரண்டு பேர் காயமடைந்தனர். பலியான நபர் தீவிரவாதியா? பொதுமக்களில் ஒருவரா? என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிசை பெற்று வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை முதல் சுமார் 10 வான்வழி தாக்குதல்களை இஸ்ரேல் நோக்கி நடத்தினர் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

1967 -ம் ஆண்டு நடந்த போரில் கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குகரை பகுதியை இஸ்ரேல் கைபற்றியது. ஜெருசலம் நகரை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே மோதல் வலுத்து வருகிறது. காசா எல்லையோரத்தில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேலை எதிர்த்து பல மாதங்களாகவே பேரணியாகச் சென்று வருகின்றனர்.

இதில் ஏராளமான பாலதீனர்கள் கொல்லப்பட்டனர் . இது தொடர்பான விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x