Published : 31 Oct 2019 04:37 PM
Last Updated : 31 Oct 2019 04:37 PM

இராக் மற்றும் லெபனானில் பாதுகாப்பின்மையை அமெரிக்கா உருவாக்குகிறது: ஈரான்

இராக் மற்றும் லெபனானில் பாதுகாப்பின்மையை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் உருவாக்குவதாக ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கூறும்போது, “அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் இராக் மற்றும் லெபனானில் பாதுகாப்பின்மை மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்துகின்றன. அவை இந்தப் பிராந்தியத்தில் பிளவை ஏற்படுத்துகின்றன. இராக் மற்றும் லெபனானில் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுவர்கள் அவர்களது கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தாலும் அவை அரசியலைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே தீர்வு காண முடியும் என்று உணர வேண்டும்” என்றார்.

இராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் அதில் அப்துல் மஹ்திக்கு எதிராக, மூன்று வாரங்களுக்கு மேலாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இராக்கில் இம்மாதத்தில் நடந்த போராட்டத்தில் மட்டும் 200க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

லெபனானில் நிலவும் பொருளாதார நெருக்கடி , ஊழல் காரணமாக அரசை எதிர்த்து, போராட்டக்காரர்கள் பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x