Published : 28 Oct 2019 05:38 PM
Last Updated : 28 Oct 2019 05:38 PM
சவுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 7 பேர் பலியாகினர். 11 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ரியாத்தில் இயங்கும் அல் எக்பரியா செய்தி நிறுவனம் இன்று (திங்கட்கிழமை), ”சவுதியின் வடகிழக்குப் பகுதியில் பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து வெள்ளம் ஏற்பட்டது. இதில் 7 பேர் பலியாகினர். 11 பேர் காயமடைந்தனர். வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
குவைத்தில் தென்கிழக்கே 100 கிலோ மீட்டர் தூரத்தில் 15 பேர் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
மீட்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மோசமான வானிலை காரணமாக பள்ளிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் கடும் மழையை தொடர்ந்து ஏற்பட்ட சவுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 12 பேர் பலியாகினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT