Published : 28 Oct 2019 04:09 PM
Last Updated : 28 Oct 2019 04:09 PM

கொலம்பியாவில் ஹெலிகாப்டர் விபத்து: 6 பேர் பலி

கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர்.

இதுகுறித்து கொலம்பியா விமானப் படை கூறும்போது, “கொலம்பியாவின் மத்திய பகுதியில் உள்ளது அம்பா நகரம். இப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த ஹெலிகாப்டரில் இருந்த ராணுவ குழுக்கள் 6 பேர் பலியாகினர். இந்த விபத்து மிகுந்த வருத்தத்தை அளித்திருக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு எங்கள் பிரார்த்தனைகள் துணை இருக்கும் ” என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் பரவலாக பயன்பாட்டில் இருந்ததாகவும், கொலம்பியா அதிபரின் பயணத்துக்கு பயன்பட்டது என்றும், இந்த ஹெலிகாப்டர் போப் பிரான்சிஸ் பயணத்திற்கும் பயன்பட்டதாகவும் கொலம்பியா விமான துறை தெரிவித்துள்ளது .

ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x