Published : 23 Oct 2019 06:15 PM
Last Updated : 23 Oct 2019 06:15 PM

ஏமனில் அரசுப் படைகள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மோதல்

ஏமனின் சடா நகரில் ஏமன் படைகள் மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ராணுவ தளபதி ஜாஸ்ஸர் கூறும்போது, “ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் விடுவிக்கப்பட்ட பகுதிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஏமன் அரசுப் படைகள் தாக்குதல் நடத்தியதில் 6 ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

இம்மாத தொடக்கத்தில் ஹஜ்ஜாஹ் மாகாணத்தில் சவுதி மற்றும் ஏமன் படைகள் நடத்திய தொடர் தாக்குதலில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

ஏமன் போர்

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது

ஏமனில் நடந்துவரும் உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டித்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x