Published : 22 Oct 2019 05:34 PM
Last Updated : 22 Oct 2019 05:34 PM
வாஷிங்டன், ஐ.ஏ.என்.எஸ்
ஜெஃப் பெஸாஸ் உலகின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவராக இருக்கலாம், ஆனால் அவரை அமெரிக்க மாணவர் ஒருவருக்கு யார் என்று தெரியவில்லை என்பதுதான் தற்போது சமூகவலைத்தள வைரல் பேசுபொருளாகியுள்ளது.
வாஷிங்டன் டி.சியில் அமேசான் நிதி உதவியுடன் நடக்கும் டன்பார் பள்ளியின் கணினிப் பாட வகுப்பறைக்கு திடீரென ஆச்சரிய வருகை புரிந்தார். வகுப்புல் ஜெஃப் பெஸாஸ் தன் நிறுவனத்தின் திட்டமான ‘எதிர்காலப் பொறியாளர்’ பற்றி பேசினார்.
அப்போது வகுப்பில் ஒரு மாணவர் தன் பின்னால் இருக்கும் இன்னொரு மாணவரிடம் ‘ஜெஃப் பெஸாஸ் யார்?” என்று கேட்டுள்ளார். இருமுறை நச்சரித்த பிறகு இன்னொரு மாணவர் உலகிலேயே மிகப்பெரிய அமேசான் நிறுவனத்தின் தலைவர் என்று கூறியுள்ளார், அதற்கும் பெப்பே காட்டிய அந்த மாணவர், “பிக் டீல், அதனால் என்ன?” என்று கேட்டுள்ளார்.
இது நடந்த பிறகு தன்னை யார் என்று கேட்ட மாணவரிடத்திலேயே ஜெஃப் பெஸாஸ் பேசியதும் வீடியோவில் பதிவாகியுள்ளது, ஜெஃப் பெஸாஸ் அவரிடம், நீ ஒரு நல்ல கதைசொல்லி அந்தத் திறமையையும் வளர்த்துக் கொள்’ என்று கூறினார்.
நியூயார்க் போஸ்ட் செய்தியின் படி அந்த வகுப்பறையில் இருக்கும் ஆசிரியர், வகுப்பறையில் இருந்த 15 மாணவர்களில் 3 பேருக்குத்தான் ஜெஃப் பெஸாஸ் யார் என்பது தெரிந்திருந்ததாகக் கூறினார்.
வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கும் சொந்தக் காரரான ஜெஃப் பெஸாஸ் 110 பில்லியன் டாலர்கள் மொத்த சொத்து மதிப்பின் மூலம் உலகின் பெரிய செல்வந்தராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT