Published : 21 Oct 2019 06:42 PM
Last Updated : 21 Oct 2019 06:42 PM
ஈரான் தென்பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியது.
இதுகுறித்து ஏஎன் ஐ வெளியிட்ட செய்தியில், “ ஈரான் தென்பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தின் மையம் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் 2 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியது” கூறப்பட்டுள்ளது.
நிலநடுக்க அதிர்வுகள் துபை போன்றவற்றிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நில நடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
2017 ஆம் ஆண்டு இராக் - ஈரான் எல்லையில் ரிக்டர் அளவில் 7.3 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தில் 700-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2003 ஆம் ஆண்டு ஈரானில் கெர்மன் மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்திற்கு 23,000 பேர் பலியாகினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT