Published : 19 Oct 2019 06:17 PM
Last Updated : 19 Oct 2019 06:17 PM

ரஷ்ய அதிகாரிகளுடன் சிரிய அதிபர் ஆலோசனை

சிரியாவின் தற்போதைய நிலவரம் குறித்து அதிபர் ஆசாத் ரஷ்ய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து படைகளுக்கு எதிராக, துருக்கி கடந்த ஒருவாரமாக கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. துருக்கி தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

மேலும் துருக்கி சிரியாவில் போர் குற்றத்தைப் புரிந்ததாக ஆம்னெஸ்டி உள்ளிட்ட பல சர்வதேச தொண்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டின.

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், சிரியாவின் வடக்குப் பகுதியில் போர் நிறுத்தம் தொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வடக்கு சிரியாவில் 5 நாள் போர் நிறுத்தத்திற்கு துருக்கி அதிபர் எர்டோகன் சம்மதம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சிரியாவில் தற்காலிகமாக தாக்குதல் நிறுத்தப்படுவதாக துருக்கி அறிவித்தது. இந்நிலையில் சிரிய அதிபர் ஆசாத் ரஷ்ய அதிகாரிகளைச் சந்தித்துள்ளார்.

இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “டமாஸ்கஸில் ரஷ்ய அதிகாரிகள் சிரியாவின் வடக்குப் பகுதியில் தற்போதைய நிலைமை குறித்து அதிபர் ஆசாத்துடன் ஆலோசித்தனர். நிலைமை மோசமாவதைத் தடுப்பதற்கு அப்பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x