Published : 19 Oct 2019 01:53 PM
Last Updated : 19 Oct 2019 01:53 PM
இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாக கை கோக்க வேண்டும் என்று சீனா விரும்புவதாக இந்தியாவுக்கான சீனத் தூதர் தெரிவித்துள்ளார்.
சீனா அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்தியப் பிரதமர் மோடி இடையே சமீபத்தில் தமிழகத்தில் நடந்த சந்திப்பு குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு இந்தியாவுக்கான சீனத் தூதர் சுன் வைடோங் பதிலளித்தார்.
அதில் சுன் வைடோங் கூறுகையில், “இந்தப் பிராந்தியத்தில் செல்வாக்கு உள்ள நாடுகளாக சீனாவும் இந்தியாவும் உள்ளன. இரு நாட்டுத் தலைவர்களும் பிராந்தியத்தில் நடக்கும் தற்போது சூழல் குறித்த கலந்தாலோசித்தனர். இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் சீனா நட்புறவையே விரும்புகிறது. பிராந்தியத்தின் முன்னேற்றத்திற்காகவும் அமைதிக்காகவும் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக கை கோக்க வேண்டும்” என்றார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்தது. இந்த உத்தரவு வரும் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்தியாவின் இந்த முடிவைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே இருந்த பிளவு அதிகரித்தது. இந்த விவகாரத்தை பாகிஸ்தான் சர்வதேச அளவில் தொடர்ந்து எழுப்பி வருகிறது. இதற்கு காஷ்மீர் விவகாரம் தங்கள் உள் விவகாரம் என்றும் அதில் மூன்றாம் நாடுகள் தலையிட வேண்டாம் என்றும் இந்தியா பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT