கிளர்ச்சிப் படை தாக்குதலில் ஏமனில் 31 பேர் பலி

கிளர்ச்சிப் படை தாக்குதலில் ஏமனில் 31 பேர் பலி
Updated on
1 min read

ஏமனில் கிளர்ச்சிப் படை தாக்குத லில் 31 பேர் பலியாகினர். நூற்றுக் கும் மேற்பட்டோர் காயமடைந் தனர்.

ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதி ஆதரவு படைகளுக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச் சிப் படையினருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

அதிபர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபிய ராணுவம் ஹவுத்தி கிளர்ச்சிப் படை மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. தற்போது ஏமனின் பெரும்பகுதி கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதிபர் ஹைதி, சவுதியில் தஞ்சம் அடைந் துள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் துறைமுக நகரான ஏடனை தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்தி வருகின்றனர்.

இப்போது ஏடன் குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சிப் படையினர் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின் றனர். அவர்களின் ஏவுகணை தாக்குதலில் பெண்கள், குழந்தை கள் உட்பட 31 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர்.

ஏமனின் உள்நாட்டுப் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரு வதால் ஐ.நா. சபை சார்பில் அவசர நிலை 3-ம் எண் அறிவிக் கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in